பூங்காவில் விளையாடிக் கொண்டிருந்த 11 வயது சிறுவனுக்கு நேர்ந்த சோகம்!
பிரித்தானியாவின், ஸ்காட்லாந்தில் உள்ள ஒரு பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன் நீரில் முழி பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்காட்லாந்தில் தெற்கு லானார்க்ஷைர், ஸ்டோன் ஹவுஸில் உள்ள அலெக்சாண்டர் ஹாமில்டன் நினைவு பூங்காவில் இந்த சம்பவம் நடந்துள்ளது.
சனிக்கிழமை மாலை 4.30 மணியளவில், தனது நண்பர்களுடன் பூங்காவில் விளையாடிக்கொண்டிருந்த 11 வயது சிறுவன், திடீரென அங்கிருந்த குளத்தில் தவறி விழுந்து மூழ்கினான்.
உடனடியாக அவசர சேவைக்கு தகவல் கொடுக்கப்பட்ட நிலையில், அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து குழந்தையை மீட்டனர். ஆனால், முதலுதவி கொடுக்கப்பட்ட போதிலும் சிறுவன் உயிரிழந்ததாக மருத்துவர்கள் உறுதிசெய்தனர்.
பின்னர் சிறுவனின் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Comments
Post a Comment